பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல் நேற்று 24 ல் காலை திறக்கப்பட்டது. அதில், 33 லட்சத்து 14 ஆயிரத்து, 297 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சென்னிமலை, முருகன் கோவில் உண்டியலில் கடந்த, 127 நாட்களுக்கு பின், நேற்று (அக்., 24ல்) காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததை திறந்து எண்ணினர். அதில், நிரந்தர உண்டியல் எட்டு மற்றும் திருப்பணி உண்டியல் ஒன்று என, ஒன்பது உண்டியல்களை திறந்தனர். நிரந்தர உண்டியலில், 31 லட்சத்து, 96 ஆயிரத்து, 224 ரூபாய், 120.900 கிராம் தங்கம், வெள்ளி ஒரு கிலோ, 445 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 73 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 33 லட்சத்து, 11 ஆயிரத்து, 297 ரூபாய் இருந்தது. பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிகுமார், தக்கார் நந்தகுமார், செயல் அலுவலர் அருள்குமார், ஆய்வாளர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ., கல்லூரி மாணவர்கள் கணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.