Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோவில்களில் தீபாவளி சிறப்பு ... மாரியம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2018
01:11

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே, நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும், குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான அரிவாள் பாழி மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழியும் அமைந்துள்ளது, மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட, ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி உற்சவ திருவிழாவின் போது, ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலும், அதன் பழம் பெருமை வாய்ந்த மலையும், தற்போது, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. தூய்மை என்ன விலை எனக்கேட்கும் அவலநிலை உள்ளது. இங்கு வரும் பக்தர்களும், சுற்றுச்சூழலை முடிந்தவரை நாசம் செய்கின்றனர். அறநிலையத்துறையும் அவற்றை கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவும், மெத்தனப்போக்கிலும் இருந்து வருவது, ஆன்மிக அன்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இடிந்த கோபுரங்கள், சிதைந்த சிற்பங்கள், விரிசல் விழுந்த சுவர்கள், இடிந்த கல் மன்டபங்கள், மூலவர் இல்லா நடு மண்டபம் (யாதவர் மண்டபம்). மேலும், ஊற்றுகளான அரிவாள் பாழி மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழி, தற்போது, பிளாஸ்டிக் குப்பையால் நிரம்பி, சாக்கடை போல் உருமாறி உள்ளது. மெல்ல அழிந்து வரும், வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், புனரமைக்கவும், மீண்டும் கும்பாபி ?ஷகம் நடத்தவும், அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar