Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருத்தணியில் நகராட்சி அலட்சியம் ... பழநி மலைக்கோயில் கந்த சஷ்டி விழா பழநி மலைக்கோயில் கந்த சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் குவியுது கழிவுத் துணிகள்: நாறுது புனித அக்னி தீர்த்தம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் குவியுது கழிவுத் துணிகள்: நாறுது புனித அக்னி தீர்த்தம்

பதிவு செய்த நாள்

10 நவ
2018
12:11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் குவிந்துள்ள கழிவு துணிகளை அகற்றாததால் தீர்த்தம் துர்நாற்றம் வீசுகிறது.

ஜோதிர்லிங்க தலங்கள் 12ல் தீர்த்த தலமாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் வட, தென் மாநிலங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடுவார்கள்.

ஆனால், சில தனியார் லாட்ஜ், வீடுகளில் செப்டிக் டாங்க் இல்லாததால் இங்கிருந்து வெளி யேறும் கழிவு நீர் நேரடியாக அக்னி தீர்த்த கடலில் கலந்து துர்நாற்றம் வீசியது. மேலும் நீராடிய பிறகு பக்தர்கள் வீசும் கழிவுத் துணிகள் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்குவதால் மாசடைகிறது. நேற்று (நவம்., 9ல்) கழிவுத் துணிகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

ஆனால், நகராட்சி டிரைவர் தற்கொலை விவகாரத்தில் துப்புரவு ஆய்வாளர் அய்யப்பன் நீண்ட விடுப்பில் சென்றதால் சுகாதாரப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் நவ.,6 முதல் நவ.,9 வரை குப்பை அகற்ற போதுமான ஊழியர்கள் பணிக்கு வராததால் கடந்த 4 நாட்களாக அக்னி தீர்த்த கரையில் கழிவு துணியை அகற்றாமல்  குவிந்து கிடந்தது.

இதனால் அக்னி கடற்கரையில் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடியும், சிலர் நீராடாமல் திரும்பிச் சென்றனர். மேலும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், தேவர் சிலை, வேர்க்கோடு, மாந்தோப்பு பகுதியில் குப்பையால் நகர் முழுவதும் நாறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே புனித நகரில் சுகாதாரம் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar