Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலுண்டு வினையில்லை.....மயிலுக்கு ... பார்வை ஒன்றே போதுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முருகனின் முற்பிறவி ரகசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
05:11

முருகன் எப்படி அவதரித்தார் என்பது குறித்து காஞ்சிப்பெரியவர், திரிபுரா ரகஸ்யம் என்ற நுாலில் மேற்கோள் காட்டியுள்ளார்.பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர். இவர் ஒருமுறை அசுரர்களுடன் போர் புரிந்து வெல்வது போல கனவு கண்டார். இது பற்றி தந்தை பிரம்மாவிடம் விளக்கம் கேட்டார். “முற்பிறவியில் அசுரர்களின் அட்டகாசத்தைக் கண்ட நீ அவர்களை ஒழிக்க முடிவெடுத்தாய். அதுவே கனவாக வெளிப்பட்டது. எல்லா உயிர்களையும் தெய்வமாக நீ கருதுவதால் போர் புரிய மாட்டாய். அடுத்த பிறவியில் கனவு பலிக்கும் என்றார். இப்படிப்பட்ட ஞானியான சனத்குமாரிடம் வேண்டும் வரம் அருள்வதாக சிவபார்வதி தெரிவித்தனர். வரம் பெற்று பிழைக்கும் தேவை எனக்கில்லை. வேண்டுமானால் நான் வரம் தருகிறேன்,” என்றார். ஆசை துளியும் இல்லாத சனத்குமாரரைக் கண்டு மகிழ்ந்த சிவன் “அப்படியானால்... ஞானியான நீ எனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்” என்றார். சரி..என்று ஒப்புக்கொண்ட சனத்குமாரர் அதிலும் ஒரு புள்ளி வைத்தார். “சிவனே! நீர் மட்டும் தான் என்னை பிள்ளையாகப் பிறக்கக் கேட்டீர். எனவே, தாயின் சம்பந்தமின்றி பிறப்பேன்” என்றார். இதையறிந்த பார்வதி வருந்தினாள். அதற்கு சிவன், “கவலை வேண்டாம்! பஸ்மாசுரன் என்பவன் யார் மீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் வரத்தை பெற்றான். அதைச் சோதிக்க என் தலையிலேயே கை வைக்க முயற்சிக்கவே, நான் மறைந்தேன். என்னைக் காணாத சோகத்தில் தண்ணீராக உருகிய நீ பொய்கையாக மாறினாய். அதுவே இப்போது சரவணப்பொய்கையாக இருக்கிறது. நெற்றிக்கண் மூலம் நான் சனத்குமாரனை தீப்பொறிகளாக உண்டாக்குவேன். அத்தீயை தாங்கும் சக்தி அந்த பொய்கைக்கு மட்டுமே உண்டு. சரவணப்பொய்கையில் தாங்கும் போது உனது சம்பந்தமும் பிள்ளைக்கு வந்து விடும்” என்றார். அதன்படியே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் அவதரிக்க சரவணப் பொய்கையாக தாங்கினாள் பார்வதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar