Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... விருதுநகரில் சூரசம்ஹார விழா கோலாகலம் அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம் விருதுநகரில் சூரசம்ஹார விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி அருகே குன்றக்குடி, திருப்புத்தூரில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி அருகே குன்றக்குடி, திருப்புத்தூரில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

14 நவ
2018
12:11

காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு அறுமுக செவ்வேள் பெருமான்
எழுந்தருளல் நிகழ்ச்சியும், சூரபன்மன், தாரகன், சிங்கமுகன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சியும் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று (நவம்., 13ல்) நடந்தது.  மாலை 4:35 மணிக்கு அறுமுக செவ்வேள் பெருமான் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 5:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் சூரனை தடிதலும், ஆட்கொள்ளலுமான சூரசம்ஹார நிகழ்ச்சி சன்னதி வாசல் முன் நடந்தது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சண்முகநாத பெருமான் வெள்ளி ரதத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், பாலசுப்பிரமணியன் யானை வாகனத்திலும், முத்துகந்தர் மயில்
வாகனத்திலும், வீரவாகு தேவர் குதிரை வாகனத்திலும், தண்டாயுதபாணி கடா வாகனத்திலும் எழுந்தருளினர்.

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று (நவம்., 13ல்)காலை 10:00 மணிக்கு முருகனுக்கு சண்முகா அர்ச்சனைக்கு பின் அபிஷேக ஆராதனை நடந்தன. மாலை 5:00 மணிக்கு முருகன் சன்னதியிலிருந்து புறப்பாடாகி சிவகாமி அம்மன் கோட்டத்திற்கு சென்று வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் கோயிலிலிருந்து சூரனை வதம் செய்ய தேரோடும் வீதிக்கு சென்று அங்கு பிள்ளையார் தேர் அருகே எழுந்தருளினார்.

அங்கு உலாவிக்கொண்டிருந்த சூரனை வேலை எய்து வதம் செய்தார். தொடர்ந்து மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முருகனுக்கு தீபாராதனை நடந்து திருவீதி வலம் வந்தார். திரளாக
பக்தர்கள் கூடி சூரசம்ஹாரத்தை தரிசித்தனர்.

இன்று (நவம்., 14ல்) திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வர காலை 10:30 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar