Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி அருகே குன்றக்குடி, ... வில்லியனூரில் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் சூரசம்ஹார விழா கோலாகலம் அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
விருதுநகரில் சூரசம்ஹார விழா கோலாகலம் அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

14 நவ
2018
01:11

* விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா அனைத்து முருகன் கோயில்களிலும் விமரிசையாக நடந்தது.

முருக பெருமானுக்கு விசேஷமான கந்த சஷ்டி விழா நவ., 8 ல் துவங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர். மாவட்டத்தில் முக்கிய முருகன் கோயில்களான விருதுநகர்
வாலசுப்பிரமணியசாமி கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா நடந்தது. 5 - ம் நாளான நேற்று (நவம்., 13ல்) சூரசம்ஹார விழா நடந்தது.

விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் தேசபந்து மைதானத்தில் வீரபாகு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வாலசுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில்
வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

*சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா, 84 ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா ஒரு வாரமாக நடந்து வருகிறது. தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சூரசம்ஹாரம் விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் வந்து அசுரனை வதம் செய்தார். பட்டர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை நடத்தினார்.

* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி பாராயணத் துடன், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. வெள்ளவிநாயகர் கோயிலிலிருந்து கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.மாலையில் முருகபெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி முத்தலாம்மன் கோயில் திடலில் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோசத்துடன் முருகபெருமானை வழிபட்டனர்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் முருகபெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ்பட்டர் செய்தனர். மாலையில்
சண்முகர் மற்றும் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடந்தது. கோயில் ரதவீதியில் சூரபத்மனை சண்முகர் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தரிசித்தனர்.

* சாத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்காரம் நேற்று (நவம்., 13ல்) மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 7:00 மணி வரை நடந்தது.  நான்கு ரத வீதிகள் வழியாகமயில் வாகனத்தில் வலம்வந்த சுவாமி, சூரனை சம்காரம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar