Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூரில் திருக்காமீஸ்வரர் ... வடவள்ளி  மருதமலையில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் வடவள்ளி மருதமலையில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில், சூரனை வதம் செய்த முருகப்பெருமான்
எழுத்தின் அளவு:
உடுமலையில், சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

பதிவு செய்த நாள்

14 நவ
2018
01:11

உடுமலை: உடுமலையில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, பக்தர்களின் வெற்றி வேல்... வீரவேல் கோஷம் முழங்க நேற்று (நவம்., 13ல்) நடந்தது.
தீயவை அழித்து, நல்லவை அருளும் விழாவான, கந்த சஷ்டி விழா, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், 8ம் தேதி, காப்பு கட்டுதலுடன்

துவங்கியது.தொடர்ந்து சுவாமிக்கு, தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி, சஷ்டி விரதத்தை துவக்கினர். முக்கிய நிகழ்ச்சியான, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, நேற்று (நவம்., 13ல்) நடந்தது.

பிற்பகல், 3:15 மணிக்கு, முருகப்பெருமான் விரதம் இருந்து, தனது அம்மையான சக்தியிடம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.தொடர்ந்து, சக்தி வேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்யும் போர்க்கோலத்தில் எழுந்தருளினார்.

நூற்றுக்கணக்கான பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷம் முழங்க, பிரதான வீதிகளில் ஆக்ரோஷமாக எழுந்தருளினார்.நான்கு மூலைகளில், கஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் என பல வடிவங்கள் எடுத்து, ஆடி வந்த அரக்கனின், தலையை கொய்து வதம் செய்து, வெற்றி கொண்டார்.தொடர்ந்து, சுவாமிக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

இன்று (நவம்., 14ல்) காலை, 10:00க்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

அதே போல், முத்தையா பிள்ளை லே-அவுட், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நேற்று (நவம்., 13ல்) நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar