விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கந்த சஷ்டி விழா முடிவடைந்து நேற்று முன்தினம் (நவம்., 14ல்) மாலை முருகனுக்கு திருக் கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர் மலர்களால் அலங்கரித்து, மாப்பிள்ளை வீட்டார் வரிசை எடுத்து வந்து ஐதீக முறைப்படி காப்பு கட்டி, ஹோமபூஜைகள் செய்துமுருகனுக்கு திருக்கல்யாணம் செய்தனர்.தொடர்ந்து மகாதீப ஆராதனை நடந்தது. திருமண வைபத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் முருகன் திருக்கல்யாணஉற்சவத்தில் திரளாக கலந்து கொண்டனர்.