பதிவு செய்த நாள்
17
நவ
2018
03:11
உடுமலை: "கஜா புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது.
கஜா புயல் தாக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்தது.நிலப்பகுதிக்குள் வந்த புயல் காற்று, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை கடக்கும்போது, கனமழை பெய்தது.
இதனால் உடுமலை திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.மதியம் தீவிரமடைந்த மழையால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலாற்றில் அபரிமிதமான வெள்ளம் வந்தது. மலையடிவாரத்தில் உள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது.
கோவில் நடை சாத்தப்பட்டு, கோவில் வளாகத்திற்குள் யாரும் நுழையாதவாறு, தடுப்புகள் அமைக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்திற்குள் உள்ள உண்டியல்கள், வெள்ளம் புகாதவாறு, பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டன.