Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் கோவிலில் பக்தர்கள் மாலை ... திருவண்ணாமலைக்கு 2,650 சிறப்பு பஸ்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2018
12:11

ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். நேற்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர்.

சேதுக்கரை, தேவிபட்டினம் கடலில் புனித நீராடிய பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு ஆவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறுகையில், வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை 1 முதல் 48 நாட்களும் இரவு பஜனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனையும், தினமும் இரவில் அன்னதானமும் நடக்கிறது,  என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயில், பாரதிநகர் ஐயப்பன் கோயில், சுந்தரராஜப்பெருமாள் கோயில், அவரவர் குலதெய்வக் கோயில், இஷ்ட தெய்வ கோயில்களில் மாலை அணிந்து கொண்டனர்.

ராமேஸ்வரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசிக்க ராமேஸ்வரத்தில் 5,000 பக்தர்கள் மாலை அணிந்து 45 முதல் 60 நாட்கள் வரை விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

அதன்படி நேற்று கார்த்திகை 1ல் ராமேஸ்வரம் கோயில் விநாயகர், காசிவிஸ்வநாதர் சன்னதி முன்பு கோயில் குருக்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

அய்யப்ப பக்தர் குருநாதர் தில்லைபாக்கியம் கூறுகையில், இந்தாண்டு ராமேஸ்வரத்தில் இருந்து 5000 முதல் 7000 பக்தர்கள் இருமுடி கட்டி செல்வோம். பெண்களுக்கு கண்டிப்பாக இருமுடி கட்டமாட்டோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar