பம்பை: பம்பையில் பக்தர்கள் புனித நீராடிய பின் ஆடைகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். நேற்றைய நிலவரப்படி ஒரு டன் அளவிற்கு மேல் ஆடைகள் குவிந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானம் நடை திறக்கும் நேரங்களை போலீசார் மைக் மூலம் அவ்வப்போது அறிவிக்கின்றனர். நேற்று காலை 11:00 - மதியம் 2:00 மணி வரை கோயிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பின், குழுவாக அனுப்பினர்.