புல்மேடு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2018 12:11
மூணாறு: சபரிமலைக்கு சத்திரம், புல்மேடு வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சபரிமலைக்குச் செல்ல எரிமேலி, பம்பை முக்கிய முக்கிய வழித்தடமாகும். இது தவிர இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு, சத்திரம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில் நடந்தும் சன்னிதானத்திற்குச் செல்லலாம். இந்த வழியை மகர விளக்கு காணச் செல்லும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்துவர். புல்மேடு வழியாக செல்ல செப். 17 முதல் அனுமதியளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் எரிமேலி, நிலக்கல்,பம்பை ஆகிய பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. எனவே புல்மேடு பாதையை பக்தர்கள் அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர். தமிழக, கேரள பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர பக்தர்களும் அவ்வழியாக சபரிமலை செல்ல துவங்கியுள்ளனர்.