பதிவு செய்த நாள்
21
நவ
2018
02:11
குமாரபாளையம் : -குமாரபாளையத்தில், பிரதோஷ நாளையொட்டி அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடந்தன.
இதேபோல், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவபெருமான் கோவில், சவுண்டம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில்
சிறப்பு வழிபாடுகள் நடந்தன.