பதிவு செய்த நாள்
25
நவ
2018
02:11
திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், டிச., 4ம் தேதி, தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.இக்கோவில், சிவபெருமான் திருநடனம் ஆடிய ஐந்து திருச்சபைகளில், முதற்சபையான ரத்தின சபையாக விளக்குகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நடப்பாண்டிற்கான தெப்பத் திருவிழா, டிச., 4ம் தேதி, சுவாதி நட்சத்திரத்தில், ஆலங்காட்டீசர் ஆலய சென்றாடு தீர்த்தக்குளத்தில், தெப்பலில், வடாரண்யேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இரவு, 7:00 மணிக்கு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்பத்தில் வடாரண்யேஸ்வர சுவாமி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.