சபரிமலை: சபரிமலையில், -பக்தர்கள் இருமுடி கட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி, தந்திரிகண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியது:பம்பை ஆற்றில் பக்தர்கள் ஆடைகளை வீசுவதை தவிர்க்க வேண்டும்.இருமுடி கட்டில் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பன்னீர் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் சபரிமலையில் சுற்றுச்சூழல் பிரச்னையை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க பக்தர்கள்ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.