ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.49.54 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2018 12:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 49.54 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணினர். இதில் ரொக்கம் 49 லட்சத்து 54 ஆயிரத்து 846 ரூபாய். தங்கம் 46 கிராம், வெள்ளி 1 கிலோ 385 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர் கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன், கோயில் ஊழியர்கள், சேலத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.