பதிவு செய்த நாள்
07
டிச
2018
11:12
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நாளை (டிச.8) பகல்பத்து உற்சவம், டிச.18 ல் சொர்க்கவாசல் திறப்பு, ஜன.8 முதல் ஜன.15 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நடக்க உள்ளன.பகல்பத்து உற்சவத்தின் துவக்கமாக நாளை மாலை 5:00 மணிக்கு வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு டிச.18 காலை 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று அதிகாலை பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைகிறார்கள். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடக்கிறது.ராப்பத்துடிச.18 துவங்கி 28 வரை தினமும் வடபத்ரசயனர் சன்னதியில் ராப்பத்து உற்சவங்கள் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு அரையர்சேவை, சேவாகாலம் நடக்கிறது.2019 ஜன.8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய்காப்பு உற்சவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார்.மதியம் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு சேவை நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர்.