பதிவு செய்த நாள்
15
டிச
2018
01:12
திருவள்ளூர்: பெருமாள்பட்டு, ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்க சுவாமி திருக்கோவிலில், வரும், 18ம் தேதி, வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம் நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, பெருமாள்பட்டு பகுதியில், ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்க சுவாமி திருக்கோவில் உள்ளது.இங்கு, விநாயகர், அய்யப்பன், ஆஞ்சநேயர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. இக்கோவில், வேப்பம்பட்டில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில், ஏகாதசி தினத்தை முன்னிட்டு, வரும், 18ம் தேதி, சிறப்பு மஹோத்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.காலை: 6:30 மணிக்கு, கருட வாகனத்தில் ஸ்ரீபெருமான் வீதியுலா புறப்பாடும், மாலை, 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும் நடக்கவுள்ளது.ஈகுவார்பாளையம் திரு.கே.முனிநாதன் குழுவின ரின் நாதஸ்வர இன்னிசை இரவு, 7:30 மணிக்கு நடக்கிறது.கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பெருமாள்பட்டு கிராம மக்கள், வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்கின்றனர்.