வில்லியனூர்:கோவிந்தபேட்டை அய்யப்ப சுவாமிக்கு ஊசுடேரியில் ஆராதனை விழா நேற்று (டிசம்., 16ல்) நடந்தது.
முத்திரைப்பாளையம் கோவிந்தன்பேட்டையில் உள்ள அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி முதல் தேதியில் அய்யப்ப சுவாமி ஊசுட்டேரியில் ஆராதனை விழா நடந்து வருகிறது. குருசாமிகள் தட்சணாமூர்த்தி தலைமையில் நாகராஜ் முன்னிலையில் ஊசுட்டேரியில் ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.