சபரிமலை, சபரிமலையில் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது.சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை 27-ம் தேதி நடைபெறுகிறது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கிய, 450 பவுன் எடை கொண்டதங்க அங்கி மூலவருக்கு அணிவிக்கப்படும்.
மண்டலபூஜைக்கு முதல் நாளிலும், மண்டல பூஜையன்றும் மூலவர் தங்க அங்கியுடன் அருள்பாலிப்பார். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன் பவனியாக எடுத்து வரப்படும். அதன்படி நாளை காலை 6:00 மணிக்கு பவனி புறப்படுகிறது.நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24ல் கோந்நி முருங்கமங்கலம் கோயில், 25ல் பெருநாடு சாஸ்தா கோயிலிலும் வைக்கப்பட்டு, 26ம் தேதி மதியம் பம்பை வந்தடையும்.அன்று மாலை மூன்று மணிக்கு சன்னிதானத்துக்கு எடுத்துவரப்பட்டு 26ம் தேதி மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். தங்க அங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.27 ம் தேதி இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30- ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடை திறக்கும். 31 அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் நடைபெறும்.