Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூரில் புலி வாகனத்தில் ஐயப்பன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் பேரூர் கோவிலில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2018
05:12

பேரூர்:மார்கழி திருவாதிரையை ஒட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உட்பட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடந்தது.மேலைச்சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ் வரர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 3:30 மணிக்கு நடராஜ பெருமான் மகாபிஷேகத்துடன் துவங்கியது.

காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர் சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், சடையநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பால், சந்தனம், தேன், இளநீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு அபிஷேகங்கள் நடந்தன.

நடராஜர், சிவகாமி அம்மை உள்வீதி பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர், மேற்கு கோபுர வாசல் முன், மாணிக்கவாசகருக்கு நடராஜர் காட்சியளித்தார்.சிவகாமி அம்மையார் நடராஜரை வலம் வந்து, கோவில் முன் எழுந்தருளினார். ராஜகோபுரவாசல் திறக்கப்பட்டு, பெருமான், சிவகாமி அம்மையாருக்கு மாலை சூடினார். இருவரும் சமேதராக கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar