Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேப்பாட்டியம்மன் கோவில் மிளகாய் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசிய கொடி ஏற்றம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வந்த கன்றுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2019
01:01

உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட கன்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. தை முதல் நாளில், மாடுகள் ஈன்றெடுக்கும்  கன்றுகளை, கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.இவ்வாறு, காணிக்கையாக பெறப்படும் காளை கன்றுகளை தங்கள் கிராமங்களில், சலகெருதாக வளர்க்க, அப்பகுதி மக்கள், பெற்றுச்செல்வார்கள். பிற கன்றுகள், இந்து அறநிலையத்துறை சார்பில், கோசாலைக்கு  அனுப்பப்பட்டு வந்தது.இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக, கைவிடப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 30 கன்றுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. அடிவள்ளி கிராமத்துக்கு ஒரு காளை  கன்று சலகெருதாக பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.காணிக்கையாக பெறப்படும் கன்றுகளை, இந்து அறநிலையத்துறையினர் பராமரிக்காத நிலையில், பராமரிப்பு  கட்டணம் வசூலிக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பக்தர்கள் கூறியதாவது: ஆல்கொண்டமால் கோவிலுக்கு, கன்றுகளை தானமாக வழங்க, ஆயிரம் ரூபாயை, பராமரிப்பு கட்டணமாக இந்து அறநிலையத்துறையினர் வசூலிக்கின்றனர். முன்பு, கோசாலைகளுக்கு,  கன்றுகளை அனுப்புவதற்கான செலவுக்கு, இத்தொகை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில் வளாகத்திலேயே கன்றுகளை இலவசமாக வழங்கி விடுகின்றனர். இந்து அறநிலையத்துறைக்கு எவ்வித செலவும்  இல்லை. எனவே, அடுத்த திருவிழாவில் இருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar