குளித்தலை பொய்யாமணி அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 01:01
குளித்தலை: பொய்யாமணி அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஜன., 26ல்) காலை, பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். நேற்று (ஜன., 26ல்) யாக சாலையில் மூன்று கால பூஜை நடந்தபின், காலை, 9:45 மணியளவில், கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர்.
பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா குழுவின் சார்பில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.