Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ஆண்டு பழமையான ‘கும்பமேளா’ குதுாகலம்!
எழுத்தின் அளவு:
2000 ஆண்டு பழமையான ‘கும்பமேளா’ குதுாகலம்!

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
11:02

உலகில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா கும்பமேளா. இரண்டாயிரம் ஆண்டு பழமையானது. ‘மனித குலத்தின் கலாசார பாரம்பரிய நிகழ்வு’ என ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.


உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் (கங்கை, யமுனை, சரஸ்வதி), உத்தரகண்ட்டில் ஹரித்துவார் (கங்கை), மத்தியபிரதேசத்தில் உஜ்ஜயினி (சிப்ரா), மகாராஷ்டிராவில் நாசிக் (கோதாவரி) ஆகிய நான்கு இடங்களில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கும்பமேளா நடக்கிறது. சாகாவரம் தரக்கூடிய அமிர்த பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் இருந்து இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக ஐதீகம். இங்கு நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.


மகா கும்பமேளா ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்துவார், பிரயாக்ராஜில்(பழைய பெயர் அலகாபாத்) நடப்பது ‘அர்த்த கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் நடப்பது ‘பூர்ண கும்பமேளா. இவ்வாறு 12 பூர்ண கும்பமேளா முடிந்த பின் (144 ஆண்டுகளுக்கு ஒருமுறை) பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடப்பது ‘மகா கும்பமேளா’. தற்போது பிரயாக்ராஜில் (ஜன., 15 – மார்ச் 4) ‘அர்த்த கும்பமேளா நடக்கிறது.

மருத்துவமனைகள்: மருத்துவ தேவைக்காக 14 தற்காலிக மருத்துவமனைகள், 243 டாக்டர்கள் உள்ளனர்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை சார்பில், ஆபத்து காலங்களில் மக்களை காப்பாற்றும் விதமாக நீர் வழித்தடத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

4,200: உ.பி., அரசு கும்பமேளாவுக்காக ரூ. 4,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
12: இதில் நாடு முழுவதிலும் இருந்து 12 கோடி பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
40: பக்தர்களின் பாதுகாப்புக்காக 40,700 எல்.இ.டி., விளக்குகள்,  1,000 சி.சி.டி.வி. ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5: ஐந்து லட்சம் கார்கள் நிறுத்துவதற்கான வசதி, 10 ஆயிரம் ‘டென்ட்கள் அமைக்கப்படடுள்ளன.
50: பக்தர்கள் பாதுகாப்பிற்காக 50 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டள்ளனர்.
22: நிரீல் மிதக்கும் 22 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar