ஊட்டியில் சாந்திகுரு பிறந்தநாள் வசந்த் பஞ்சமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2019 02:02
ஊட்டி:ஊட்டியில் சாந்திகுரு பகவானின், 129வது ஆண்டு பிறந்த நாளையொட்டி, வசந்த் பஞ்சமி விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி மினி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சாந்திகுரு கோவிலில் நேற்று (பிப்., 10ல்) காலை 6:10 மணிக்கு சாந்திகுருவின் பிரபாத்பெரி எனப்படும் பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரதிமா என்ற ஊர்வலம் கோவிலில் துவங்கி, மார்க்கெட், கமர்சியல்ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. அங்கு கொடியேற்றப்பட்டது.மகாவீரர் பவனில் அன்னதானம் நடந்தது. ஜெயின் சமூகத்தினரின் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பக்தி மண்டல் ஆகியவை இடம் பெற்றன. ஏற்பாடுகளை சாந்தி குரு கமிட்டியினர் செய்திருந்தனர்.