வடமதுரை:அய்யலூர் கருவார்பட்டி ராதா கோவிந்தா கோயிலில் ஜெகன்நாதர் தேர் திருவிழா நடந்தது.
முன்னதாக கிருஷ்ண பலராமருக்கு அபிஷேகம், ஹரிநாம சங்கீர்த்தனை, பகவத் கீதை வகுப்பு, மகாமந்திர ஜெபம், தீப ஆர்த்தி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. பின்னர் ராதா கோவிந்தா கோயிலில் துவங்கி கருவார்பட்டி, அய்யலூர் கடைவீதி வழியே களர்பட்டி சீத்தாராமர் கோயில் வரை தேரோட்டம் நடந்தது.
பக்தர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷமிட்டவாறு தேரை இழுத்து சென்றனர். அய்யலூர் களர்பட்டியில் ஜெகநாதர் லீலை உபன்யாசம், பரதநாட்டியம், குழந்தைகளின் பகவத் கீதை சுலோக பாராயணம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.