அவிநாசி:திருமுருகன்பூண்டியில், உள்ள திருமுருகநாதசுவாமி கோவில் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இதனால், பாதுகாப்பு கருதி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 16 கேமரா பொருத்தப்பட்ட நிலையில், கூடுதலாக பொருத்த நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.கேமரா பொருத்தும் பணிகள் தற்போது தீவிர மாக நடந்து வருகிறது.