பதிவு செய்த நாள்
18
பிப்
2019
06:02
ராஜகுளம்:ராஜகுளம் கிராமத்தில், நாளை(பிப்., 19ல்), வரதர் தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, தெப்போற்சவம் நடைபெறும்.நடப்பாண்டு, தெப்போற்சவத்தை முன்னிட்டு, நாளை (பிப்., 19ல்) காலை, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பிறகு, ராஜகுளம் கிராமத்தை சென்றடைவார்.அங்குள்ள மண்டபத்தில், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பிறகு, ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.