பதிவு செய்த நாள்
18
பிப்
2019
06:02
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், சுந்தரர் பதிகம் பாடி, இடக்கண் பெற்ற திருநாள் விழா நடந்தது.சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனுக்கு தான் கொடுத்த உறுதி மொழியை மீறியதால், இரு பார்வையையும் இழந்ததாக கூறப்படுகிறது. பின், காஞ்சிபுரம் வந்த அவர், ஏகாம்பரநாதரிடம், தன் பிழையை பொறுத்து, கண் பார்வையை வழங்குமாறு வேண்டினார்.
இரு கண் பார்வையை இழந்து, சுந்தரர் வருந்தியதை, காணப் பொறுக்காத ஏகாம்பரநாதர், இடக்கண் பார்வையை, சுந்தரருக்கு கிடைக்கச் செய்தார்.சுந்தரர் இடக்கண் பெற்ற நாள் மாசி மாதம், திருவாதிரை நட்சத்திரமாகும்.இதனால், மாசி மாதம், திருவாதிரை திருநட்சத்திர
தினத்தன்று, ஏகாம்பரநாதர் கோவிலில், சுந்தரர் பதிகம் பாடி, இடக்கண் பெற்ற திருநாள் விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இவ்விழா நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மை,
சுந்தரருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.