Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி செல்லியாண்டியம்மன் கோவில் ... பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்! பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவில்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2012
11:03

திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் ஒன்றான, " சி அறையிலுள்ள, 45 தங்க குடங்களின் மதிப்பீடு பணி முடிந்தது. நேற்று முன்தினம் நடந்த மதிப்பீடு பணியில், நிபுணர் குழு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. கேரளா, திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி மதிப்புள்ள, பல நூற்றாண்டு பழமை வாய்ந்த தங்க, வைர, ரத்தின பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட், வேலாயுதன் நாயரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு, நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர், கடந்த மாதம் 20ம் தேதி மதிப்பீடு பணியைத் துவக்கினர். முதலில், "எப் அறை, பின்னர் "இ அறையிலிருந்த பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டன. மேலும், "சி மற்றும் "டி அறைகளையும் திறந்து பரிசோதிக்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி பெறப்பட்டது. இதில், "சி அறை 27ம் தேதி திறக்கப்பட்டு, அதிலுள்ள தங்க பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. இரண்டு நாட்கள் நடந்த மதிப்பீடு பணியில், முதல் நாளில் 25ம், நேற்று முன்தினம் 20 என, அந்த அறையில் இருந்த 45 தங்க குடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. நேற்று முன்தினம் காலை துவங்கிய மதிப்பீடு பணி, பிற்பகல் முடிந்தது. இப்பணியில், நிபுணர் குழு உறுப்பினர்களோ, கண்காணிப்பு குழுவினரோ பங்கேற்கவில்லை. இந்த அறையில் மேலும் பல தங்க, வைர, ரத்தின பொருட்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும், "எப் மற்றும் "இ அறையிலும் மதிப்பீடு செய்யாமல் உள்ள ரத்தின பொருட்களும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வைர, ரத்தின பொருட்களை மதிப்பீடு செய்வதற்கு, நிபுணர் குழுவில் வல்லுனர்கள் இல்லை. வல்லுனர்கள் வந்த பிறகே, அப்பணிகள் துவங்கும். தற்போதுள்ள நிலையில், மொத்தமுள்ள ஆறு அறைகளிலும் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து முடிக்க, பல மாதங்களாகும் என்றே தெரிகிறது. மேலும், அதிநவீன பாதுகாப்புடன் கூடிய புதிய அறை அமைக்க, தேவையான இடத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், வல்லுனர்களும் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா சென்று, கோலாகல உத்சவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar