Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சாட்சர ஜபம், சிவராத்திரி: ... மோகனூர் சிவன் கோவில்களில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவில் மகாசிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலை கோவில் மகாசிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

05 மார்
2019
02:03

உடுமலை: திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழாவிற்கு, பூலாங்கிணரிலிருந்து கிளம்பிய திருச்சப்பரத்திற்கு வழியோர கிராமங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வளம் பெருக வேண்டி, பக்தர்கள் சப்பரத்தின் மீது, தானியங்கள், பழங்கள் முதலியவற்றை அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமாக பக்தர்கள் வரும் நிலையில், சுற்றுப்புற பகுதி விவசாயிகள், கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபட்டு வருகின்றனர்.

தை மற்றும் ஆடி பட்ட சாகுபடிக்கு முன், அமாவாசை தினம், மாட்டு வண்டிகளை கட்டி வருகின்றனர். அதே போல், மகா சிவராத்திரி விழாவும், இதனையொட்டி, கிராமங்களில் திருச்சப்பர திருவீதி உலாவும், பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வருவதையும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.பூலாங்கிணர் கிராமத்தில், திருமூர்த்திமலை மகா சிவராத்திரி விழாவிற்காக திருச்சப்பரம் உள்ளது. இந்தாண்டு, சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் பூலாங்கிணர் கிராமத்திலிருந்து திருச்சப்பரம் கிளம்பியது. நேற்று, வாளவாடி, தளி, திருமூர்த்திநகர் வழியாக, திருமூர்த்திமலைக்கு, திருச்சப்பரம் வந்தடைந்தது.வழியோர கிராமங்களில், சப்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்த மக்கள், வேளாண் வளம் செழிக்க, மொச்சை, சுண்டல், கொள்ளு என தானியங்கள், உப்பு, பழம் ஆகியவற்றை அதன் சப்பரத்தின் மீது அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.


ஆயிரக்கணக்கான பக்தர்கள், சப்பரத்துடன், பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். திருச்சப்பரம் திருமூர்த்திமலை கோவிலை வந்தடைந்ததும், இரவு, 8:00 முதல் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனையும், இரவு, 10:00க்கு, இரண்டாம் கால பூஜை, இன்று, அதிகாலை, 2:00க்கு, மூன்றாம் கால யாக பூஜை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், 16 தீப மகா தரிசனம் மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது. இரவு முழுவதும், கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் வசதிக்காக, இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar