Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரண்டப்பள்ளி வனப்பகுதியை கோதண்ட ... மயிலை கபாலிஸ்வரர் பங்குனி பெருவிழா: 11ல் துவக்கம் மயிலை கபாலிஸ்வரர் பங்குனி பெருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல்
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல்

பதிவு செய்த நாள்

05 மார்
2019
05:03

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வேல் வைக்கப்பட்டுள்ளதால், ‘அதர்மம் ஒழிந்து நன்மை பெருகும்’ என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது,  வழக்கமாக உள்ளது. இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கம் அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த பிப்.,6 முதல், காவிரி ஆற்று நீர், தீர்த்த கலசம் வைத்து பூஜிக்கப்பட்டது. இன்று முதல் வேல் இடம் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த சந்திரபுஷ்பம், 50, என்ற பக்தரின் கனவில், வேல் வைக்க உத்தரவானது. அதை தொடர்ந்து, வெள்ளியில் செய்யப்பட்ட வேல், உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: கடவுள் முருகனிடம் உள்ள வேல் அதர்மம், தீமையை அழிக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில், வேல் இடம் பெற்றுள்ளதால், நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.

வேல் கொடுத்த பக்தர் சந்திரபுஷ்பம், கூறியதாவது: திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன். கடந்த, 25 நாட்களுக்கு முன், கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘என் சன்னதியில் உள்ள பெட்டியில் வேல் கொண்டு போய் வை’ எனக்கூறி மறைந்தார். இதுகுறித்து பலரிடம் விசாரித்து, சிவன்மலையில் பெட்டி இருப்பதை அறிந்து, வேல் கொண்டு வந்தேன். இதற்கு முன்னதாக, சிவன்மலை கோவிலுக்கு வந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar