Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ... ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா

பதிவு செய்த நாள்

12 மார்
2019
12:03

சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின், பங்குனி பெருவிழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகமாக துவங்கியது. தொண்டை மண்டல சிவ தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும், பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா, விடையாற்றி கலை விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் சென்னை, புறநகர் மட்டுமின்றி, வெளி ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து, ஈஸ்வரனை தரிசனம் செய்வர். கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை, 6:00 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:40 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


விழாவின், 2ம் நாளான இன்று காலை, 8.30 மணிக்கு  வெள்ளி சூர்யா வட்ட அலங்காரத்தில் கற்பகாம்பாள் உடன் கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9 மணிக்கு சந்திர பிரபை காட்சியும் நடைபெறுகிறது. நாளை அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் முலைப்பால் விழா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான அதிகாரநந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாடவீதிகளை சுற்றி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நான்கு வீதிகளிலும், 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்படுகின்றன. திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலிலும், பங்குனி மாதப் பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
மயிலாப்பூர்: மயிலாப்பூர், வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில், ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar