ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வரலாம். அதை நீடிக்க விடாதீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் என குர்ஆன் போதிக்கிறது. ஏனெனில் ஒருவர் இன்னொருவருக்கு சகோதரர் போன்றவர். அப்படியே கோபமிருந்தாலும் மூன்று நாளைக்கு மேல் நீடிப்பது தகாத செயல். இந்நிலையில் கோபத்தை வெளிப்படுத்தியவர் மரணமடைந்தால் நரகத்திற்கு செல்வார். பிறர் மீது வெறுப்பை வளர்ப்பவர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறு செய்யாதவர்கள் யாருமில்லை. யாரொருவர் பிறர் செய்த தவறுக்காக கோபப்படுகிறாரோ, அவரும் ஏதோ ஒருவிதத்தில் தவறு செய்தவராகவே இருப்பார். எனவே பிறர் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். மாறாக அன்பு காட்டுங்கள். அதே போல ஒருவர் மற்றொருவரைப் புறம் பேசினால் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாவம் சேரும். எவனொருவன் மற்றொருவனின் மானத்துக்கு நிகழும் கெடுதலைத் தடுக்கிறானோ அவனை இறைவன் பாதுகாப்பான்.