Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத ... உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் பெருமாள் சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
11:03

மாமல்லபுரம் :திருக்கழுக்குன்றம் அருகே, பாலாற்றில், பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த, ஆனூர் கிராமத்தையொட்டி பாலாற்றில், கடந்த மாதம் அரசு மணல் குவாரி துவக்கப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு, ஆற்றுக்குள், கூலித் தொழிலாளர்கள் மணல் அள்ளினர். அப்போது, கருங்கல் சிலை இருப்பதைக் கண்டனர். அதை எடுத்து சுத்தம் செய்த போது, வேதநாராயணப் பெருமாள் சிலை என்பது தெரிந்தது. சிலை, நான்கடி உயரம் கொண்டது. பெருமாள் அமர்ந்த கோலத்தில், சங்கு, சக்கரம் ஆகியவற்றை தாங்கியபடி, நான்கு கைகளுடன் உள்ளார். இடதுகால் மடித்தும், வலது கால் தொங்கியபடியும் உள்ளது. தகவலறிந்த பொது மக்கள், திரண்டு வந்து சிலையைப் பார்வையிட்டனர். இது குறித்து, ஊராட்சித் தலைவர் தேவி விஜயகுமார், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்லப்பா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் அமீர் உசேன் ஜஹாங்கீர் ஆகியோர், நேரில் சென்று சிலையை பார்வையிட்டனர். அங்குள்ள கோவிலில், சிலையை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி, கிராமப் பிரமுகர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து, அங்குள்ள வேதநாராயணப்பெருமாள் கோவில் அர்ச்சகர் ராமண்ணா கூறும்போது, "இங்கு, பழமையான வேதநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிலையை போன்றே, ஆற்றில் கிடைத்த சிலையின் தோற்றமும் உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar