Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலாடி நல்ல காமாட்சிஅம்மன் கோயிலில் ... அன்னூரில் மன்னீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலியில் திருடப்பட்ட, ரூ.30 கோடி பஞ்சலோக நடராஜர் சிலை
எழுத்தின் அளவு:
திருநெல்வேலியில் திருடப்பட்ட, ரூ.30 கோடி பஞ்சலோக நடராஜர் சிலை

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
02:04

சென்னை: திருநெல்வேலியில் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியில், குலசேகரமுடையார் - அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 600 ஆண்டுகள் பழமையான, 17 பஞ்சலோக சிலைகள் இருந்தன.

இவற்றில், நடராஜர், சிவகாமி அம்மாள், ஸ்ரீபலி நாயகர், மாணிக்கவாசகர் என, நான்கு சிலைகள், 1982 ஜூலை, 5ல் திருடு போயின. இந்தச் சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என, கல்லிடைகுறிச்சி போலீசார், வழக்கை கிடப்பில் போட்டனர்.

இதுகுறித்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன். மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. அவரது தலைமையிலான போலீசார், தற்போது துப்பு துலக்கி உள்ளனர்.
திருட்டு போன நான்கு சிலைகளில், 2 அடி உயர, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள, அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதை, தமிழகத்திற்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, பொன் மாணிக்கவேல் கூறியதாவது: நடராஜர் சிலை, தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலை தான் என, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. அந்த சிலையை, 30 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்து உள்ளது.

இந்த சிலை, விரைவில் தமிழகத்திற்கு வந்து சேரும். மீதமுள்ள, மூன்று சிலைகள் பதுக்கப்பட்டுஉள்ள இடங்களை கண்டறியும் பணி, தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. குலசேகரமுடையார் - அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.

அவற்றை சரி செய்ய வேண்டும் என, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar