Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் திருக்கல்யாணம் சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொட்டல்புதூர் பள்ளிவாசல் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2012
11:03

ஆழ்வார்குறிச்சி :பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டர்வர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தென்தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்தஆண்டு கந்தூரி விழா கடந்த 23ம் தேதி மதியம் 2 மணியளவில் கீழூர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலத்துடன் துவங்கியது. கடந்த 3ம் தேதி பச்சைகளை ஊர்வலமும், 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்பிஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும் நடந்தது. 2 மணிக்கு மேலூர் ஜமாத் 10ம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு ரவணசமுத்திரத்தில் இருந்து மேளதாளங்கள், வீர விளையாட்டுக்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. நேற்று அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் பொட்டல்புதூர் வந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் பள்ளிவாசல் வந்ததும் இனாம்தார் எஸ்பிஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடந்தது. மாலை தீப அலங்கார திடலில் தீப அலங்கார வைபவம் நடந்தது. நாளை (7ம் தேதி) 14ம் இரவு சிறப்பு வைபவமும், ராத்திபு ஓதுதலும் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்பிஷா தலைமையில் வக்கீல்கள் முகம்மது ரபீக், சம்சுதீன் முன்னிலையில் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட ... மேலும்
 
temple news
புட்டப்பர்த்தி; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்ஸவம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar