பரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் மீனாட்சி - விசாலாட்சி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2019 02:04
பரமக்குடி : பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சித்திரை திருவிழாவை யொட்டி திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை 11:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்துடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு விசாலாட்சி அம்மனுடன்ஊஞ்சலில்தோன்றினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரம் முழங்க 11:35 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலிக்கயிற்றைமாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும்வீதிவலம் வந்தனர்.இதே போல் இரவு 7:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஜவுளிவியாபாரிகள் மகாலில் இருந்து மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தார். அங்கு மீனாட்சிக்கும்,சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 9:00மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் வந்தனர். இன்று இரண்டு கோயில்களிலும் காலை 9:30 மணிக்கு சுவாமி,அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.