பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
கோத்தகிரி:கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு கணபதி வேள்வி பூஜை
நடந்தது. காலை, 9:00 மணிக்கு, காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது. திருவிழா, அடுத்த மாதம், 7ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு அலங்கார அபிஷேகம் வழிபாடு
நிகழ்ச்சியும், பகல், 1:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.