பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், உலக நன்மை வேண்டி, நவசண்டி மகா ஹோமம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் சாலை இரும்பை குபேரன் நகரில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஆறாம் ஆண்டு நவசண்டி மகாயாக பெருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பூஜைகள் துவங்கியது. அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மாத்ருக பூஜை, கலச ஸ்தாபனும், மாலையில் முதல்கால சண்டிகா நவாவரண பூஜை, ஸப்தசதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம, மண்டப பூஜை, சண்டி நவாவரண பூஜையை தொடர்ந்து சண்டி ஹோமங்கள் துவங்கியது. 13 அத்யாய ஹோமங்கள், பூர்ணாஹீதி, சவுபாக்கிய திரவிய ஸ்மர்ப்பணம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மசாரி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 7.00 மணிக்கு, மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையும் அம்பாள் சாமி ஆலய உள்புறப்பாடு நடந்தது.