பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
பல்லடம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பல்லடம் அருகே மாகாளியம்மன் கோவிலில், பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்து அம்மனை வழிபட்டனர்.விழாவை முன்னிட்டு, பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்து மாகாளியம்மன் வழிபட்டனர். திருமகளாக விளக்கை பாவித்து, மஞ்சள், குங்குமம், பூ, வைத்து அலங்கரித்து, விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின், 108 போற்றி அர்ச்சனை வழிபாடுகளுடன், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.< பல்லடத்திலுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதில், அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.