பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
12:04
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில், 45 லட்சத்து, 950 ரூபாய் காணிக்கை வசூலானது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல்களில், 33 லட்சத்து, 89 ஆயிரத்து, 928 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 22 ரூபாயும் இருந்தது. மொத்தம், 45 லட்சத்து, 950 ரூபாய் காணிக்கை; 151 கிராம் தங்கம் மற்றும் 464 கிராம் வெள்ளி இருந்தது.இதில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.