Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் கூடுதல் வசதி ... சிறுபாக்கம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறுபாக்கம் அருகே அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுக்கார்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவில் அறநிலைய துறை அலட்சியத்தால் அவல நிலை
எழுத்தின் அளவு:
சவுக்கார்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவில் அறநிலைய துறை அலட்சியத்தால் அவல நிலை

பதிவு செய்த நாள்

30 ஏப்
2019
12:04

சவுக்கார்பேட்டை: வெங்கடேசப் பெருமாள் கோவில் மற்றும் தேர், உற்சவ வாகனங்கள் பராமரிப்பின்றி, சிதலமடைந்து வருகின்றன. அதன் மகத்துவம் உணர்ந்து, அறநிலைய துறை, கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுக்கார்பேட்டை, ஜெனரல் முத்தையா முதலி தெருவில், திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோவில், 38 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.பாகிஸ்தான், லாகூர் நகரில் இருந்து, 1800ல், சென்னைக்கு யாத்திரை வந்த லால்தாஸ் என்பவரால், இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், வடமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் வகையில், பைராகி மடம் ஒன்றையும் கட்டினார்.இக்கோவிலில் மூலவர், வெங்கடேச பெருமாளாகவும், உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் மூலவர், திருமலை மூலவர் போலவே காட்சியளிக்கிறார்.தெற்கில், பைராகி மடம், வடக்கில் புஷ்கரணி, அதையொட்டி, ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளன.

மேலும், ரங்கநாதர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், வாரகர், வரதராஜ பெருமாள், பாண்டு ரங்கர், பூரி ஜெகநாதர், பத்மாவதி தாயார் சன்னிதிகள் உள்ளன.திருமலையை போன்று, ஆண்டுதோறும், புரட்டாசி மாத பிரம்மோற்சவம், விமரிசையாக நடத்தப்படும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பராமரிப்பின்றி காணப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன், கோவில் தேர் பழுதடைந்தது. அதை பராமரிக்காமல் விட்டதால், திருவிழாக்களில், தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பிரம்மோற்சவம் நடக்கும், 10 நாட்களில், உற்சவர் வீதி உலா வரும் சேஷ, கருட, குதிரை, யாளி உள்ளிட்ட வாகனங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கோவில் குளமும், பொலிவிழந்து காணப்படுகிறது.

கோவில் சுவர்களிலும், செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப் பின்றி விரிசல் விழுந்துள்ளன. கோவில் வளாகத்தில் வரையப்பட்டுள்ள, பழமை வாய்ந்த சுவாமி ஓவியங்களும், சேதமடைந்து வருகின்றன.கடந்த, 2007ம் ஆண்டு சம்ரோக் ஷணத்திற்கு பின், இக்கோவில் பராமரிப்பு பணியை, அறநிலையத்துறை கைவிட்டதால், கோவிலின் நிலை, மோசமாக உள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், இக்கோவில் இருந்தும், எந்த பயனும் இல்லை. சேவார்த்திக்கள் சார்பில், கோவிலை புனரமைக்க தயாராக உள்ளோம். அதற்கும், அனுமதி கிடையாது. திருப்பதிக்கு நிகரான இக்கோவிலை, மீண்டும் புதுப்பொலிவுடன் மீட்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை என்பதை, அதிகாரிகள் உணர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar