விபூதி: வி - மேலான, பூதி - ஐஸ்வரியம். மேலான ஐஸ்வரியத்தை அளிப்பதால், விபூதி, இங்கு மேலான ஐஸ்வரியம் என்பது முக்திப்பேறு. பசிதம்: அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால், பசிதம் எனப்படும். சாரம்: ஆன்மாக்களின் மன மாசுகளை நீக்குவதால், சாரம் என்றழைக்கப்படுகிறது. ரட்சை: ஆன்மாக்களைத் துன்பத்திலிருந்து ரட்சிப்பதால், ரட்சை எனப்படுகிறது.