Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாதசுவாமி கோயிலில் ... அட்சய திருதியை : அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அட்சய திருதியை : அலைமகளே வருக! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலையில் யாகம்; மாலையில் மழை! அவிநாசியில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காலையில் யாகம்; மாலையில் மழை! அவிநாசியில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 மே
2019
12:05

அவிநாசி;அவிநாசி கோவிலில், காலையில், மழைப்பதிகம் பாடி பாராயணம் செய்யப்பட்டது. அதற்கு மனமிறங்கிய வருண பகவான் மாலையில், மழை பொழிந்தார். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி ஸ்ரீ வருண யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

ஸ்ரீ விகாரி தமிழ் ஆண்டில் மாநிலம் முழுக்க பருவமழை பெய்யவும், கோடைக்கு பிறகு, வசந்தம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவிலில்களில், சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்ரீ வருணஜப யாகம், நேற்று அவிநாசியில் உள்ள கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. அதில், நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிேஷகம் நடைபெற்றது.அதன்பின், கோவில் சிவாச்சாரியார்கள், பர்ஜன்ய சாந்தி வருணஜப வேள்வி நடத்தினர். இதில் பஞ்ச வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி ராகங்கள் இசைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், தெப்பகுளத்துக்கு பூஜை செய்தனர். ஓதுவாமூர்த்திகள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற மழைப்பதிகங்களை பாராயணம் செய்தனர். சிவாச்சாரியார்கள், தெப்பக்குளத்தில் இறங்கி, கழுத்தளவு நீரில் நின்றபடி பாராயணம் செய்தனர். அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.காலையில், மழைப்பதிகம் பாடி, வருணஜபம் நடந்த நிலையில், மாலையில், 5:45 மணியளவில், அவிநாசி வட்டாரத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக, தெக்கலுார், புதுப்பாளையம் பகுதியில், நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழைப்பதிகம் பாடியதில், வந்த மழையை பார்த்து, அவிநாசி வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் மனங்குளிர்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar