விருத்தாசலம்: விருத்தாசலம் ராதாகிருஷ்ண சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் கம்பர் தெரு பஜனை மடத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண சுவாமி, கம்பத்தாழ்வார் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக நான்காம் ஆண்டை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப தோரணத்தில் ஊஞ்சலில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டு, சிறப்பு வேள்வி பூஜை செய்யப்பட்டது.
திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், சிதம்பரம் தில்லை திருச்சித்திரக்கூடம் ரெங்காச்சாரியார் சுவாமிகள், திருவதிகை ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் குழுவினர், ஓய்வுபெற்ற பி.டி.ஓ., பத்மநாபன் அய்யன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் அய்யர் முன்னிலையில் 10:30க்கு மேல் பகல் 12:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.