பதிவு செய்த நாள்
10
மே
2019
02:05
காஞ்சிபுரம்:கும்மிடிப்பூண்டிஅருகே கண்டெடுக்கப்பட்ட, 18 சிலைகள், பொதுமக்களின் பார்வைக்காக, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, எளாவூர் ஏழுகண் பாலம் அருகில், ஏழு அம்மன் சிலைகள் உட்பட, 18 கற்சிலைகளை வருவாய் துறையினர்
மீட்டனர்.அவர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகள், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர், சு.உமாசங்கர் கூறியதாவது: கண்டெடுக்கப்பட்ட சிலைகளில், கருடன் சிலை, இரு பலிபீடம் சிலைகள், மயில், நந்தி, நாகம்,
ஐந்து தலை நாகம், சிங்கம், துவார பாலகர் உள்ளன.இதுதவிர,அம்மன், விஷ்ணு துர்க்கை, அமர்ந்த மற்றும் நின்ற நிலையில் லட்சுமி, யக்ஷி என்கிற பத்ரா, வராஹி, குபேரன், அய்யப்பன் என, 17 நவீன கால கற்சிலைகளாகும்.ஒன்று மட்டும், சிவலிங்கம் செய்ய பயன்படுத்தும், மண் அச்சு வார்ப்பு உடைந்த நிலையில் உள்ளது.
இவை, 150 ஆண்டுகளுக்கு உட்பட்டவை.இந்த சிலைகள், சுத்தம் செய்யப்பட்டு அருங்காட்சி யகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் படும். மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அனைத்து தாலுகாஅலுவலகங்களில் உள்ள புதைபொருட்களையும், அருங்காட்சியகத்திற்கு எடுத்து வந்து,பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இவ்வாறு, அவர்கூறினார்.