பதிவு செய்த நாள்
10
மே
2019
04:05
காரமடை: வைணவ ஆச்சாரியர்களில் முதன்மையானவரான ஸ்ரீ ராமானுஜரின்,1,002 வது ஜெயந்தி விழா வைபவம் காரமடை ரங்கநாதர் கோவிலில் நேற்று (மே., 9ல்) விமரிசையாக
நடைபெற்றது.கொங்கு மண்டலத்தின் வழியாக ஸ்ரீ ராமானுஜர் தனது சீடர்களுடன் மைசூர் சென்றார், வழியில், பாலமலை தண்டிகை மலையை கடந்து காரை வனத்தினுள் இருந்த
ரங்கநாதரை தரிசித்து மங்களாசாசனம் செய்தார்.
அந்த இடங்களில் 1,002 வது ஜெயந்தி விழாநடந்தது.காரமடை ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தியையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
அதிகாலையில் கோ பூஜை, கோ தரிசனம், காலசந்தி நடைபெற்றது.தொடர்ந்து ராமானுஜர் தனி சன்னதியில் உற்சவர் எழுந்தருளிவிக்கப்பட்டு புண்ணியாக வாசனம், சகல திரவியங் களில் அபிஷேகம் நடந்தது.மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலகாரத்தில் ராமானுஜர் ஸ்ரீரங்க மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் செய்திருந்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னூர் கரிவரத ராஜ பெருமாள் கோவிலில், காலை 5:30 மணிக்கு, விஸ்வக்சேனர் ஆராதனையுடன் ராமானுஜர் அவதார விழா துவங்கியது.
பின்னர் ஹோமம்நடந்தது.திருமஞ்சனத்துக்கு பிறகு, ஸ்ரீ ராமானுஜருக்கு அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. காலை 8:30 மணிக்கு ராமானுஜர் உட்பிரகாரத்தில்
சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சன்னிதியில் சேவை சாதித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.