திருவாடானை:திருவாடானை கோயில் தெப்பகுளம் விளையாட்டு திடலானது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு தெப்பகுளம் உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.இக்குளத்திற்கு செல்லும் கால்வாயும் அடைபட்டு விட்டதால் மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. தற்போது இக்குளத்தை சிறுவர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர்.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக நிரம்பியது. தற்போது வறண்ட நிலையில் இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. ஊரின் மையப் பகுதியில் உள்ள இக்குளத்தால் மிகுந்த பயன் இருந்தது. தற்போது சிறுவர்கள் விளையாடுவதற்கு பயன்படுகிறது, என்றனர்.