நெய்க்காரப்பட்டி, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.18 லட்சம் செலவில் ஐம்பொன் ரதம் அம்மன் சிலையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பெரியகலையம்புத்துாரில் உள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது ஆண்டுதோறும் பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு மற்றும் வைகாசி தீ மிதித்தல் விழா இங்கு விமரிசையாக நடக்கிறது.இக்கோயிலுக்கு பழநியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் என்ற பக்தர் ரூ.18 லட்சம் செலவில் 16அடி உயரம் உள்ள ஐம்பொன் ரதம் மற்றும் இரண்டரை அடிஉயர அம்மன் சிலையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் யாகபூஜை நடந்தது. ஐம்பொன் ரதத்தில் உற்ஸவர் வீதி உலா நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.